உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி காவல் நிலையத்தில் மா, பலா, தென்னை, வேம்பு, மரக்கன்றுகள் நடப்பட்டன

காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு

Published On 2022-04-07 14:58 IST   |   Update On 2022-04-07 14:58:00 IST
ஆலங்குடி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு நடை பெற்றது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில்  திருச்சி காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் வருடாந்திர ஆண்டு ஆய்வு கொண்டார். 

ஆய்வு பயணத்தின்போது ஆலங்குடி காவல் நிலையத்தில் மா, பலா, தென்னை, வேம்பு, மரக்கன்றுகள் நடப்பட்டன.


நிகழ்ச்சியில் காவல் சரக டி.எஸ்.பி. வடிவேல், இன்ஸ் பெக்டர், அழகம்மை மற்றும் ஆலங்குடி, சம்பட்டிவிடுதி சப்இன்ஸ்பெக்டர்கள், குணசேகரன், சரவணன் மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவு போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News