உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2022-04-07 05:05 GMT   |   Update On 2022-04-07 05:05 GMT
புதுவை மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்.) 1.1.2004-ல் அமல்படுத்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதற்காக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்,  பணிக்கொடை உள்பட பணப்பலன்கள் இது வரை முழுமையாக வழங்கப்படவில்லை. 

மேற்கு வங்கத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை  ஏற்காமல் பழைய திட்டத்தையே பின்பற்றுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய  திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

எனவே, புதுவை  யூனியன் பிரதேசத்தில் டி குரூப் பணியாளர்களுக்கும், இப்போதைய குரூப் சி பணியாளர்களுக்கும் மட்டுமாவது பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்தவேண்டும். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News