உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

Published On 2022-04-06 15:42 IST   |   Update On 2022-04-06 15:42:00 IST
வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர்  மாவட்டத்தில், பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இத் திட்டத்தில், விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஒரு வருடத் திற்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் 11&வது தவணை தொகையை பெறு வதற்கு தங்களது ஆதார் விப ரங்களை சரிபார்த்தல் மற் றும் ஆதார் எண்ணை வங் கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் ஆகும்.

தங்களது ஆதார் எண்ணு டன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி யுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஆதார் எண்ணுடன், செல் போன் எண்ணை இணைக் காத விவசாயிகள் அருகில் உள்ள இ&சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, தங்க ளது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரி பார்த்து கொள்ளலாம்.

இதற்கான கட்டணமாக ரூ.15 இ&சேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைக ளில் ஏதே னும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்க ளது ஆதார் விவரங்களை 31.05.2022 ஆம் தேதிக்குள் திட்ட வலை தளத்தில் பதி வேற்றம் செய்து கொள்ள தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணைக்கப்பட வில்லை எனில் 11&வது தவணை பெறுவதற்கு முன் னர் ஆதார் எண்ணை வங் கிக்கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News