உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காட்பாடி கழிஞ்சூர் ஏரியில் கட்டிட மேஸ்திரி பிணமாக மீட்பு

Published On 2022-04-06 15:36 IST   |   Update On 2022-04-06 15:36:00 IST
காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் கட்டிட மேஸ்திரி பிணமாக மீட்கப்பட்டார்.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக கழிஞ்சூரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மலர். 

தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முனீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள கழிஞ்சூர் ஏரியில் மணிகண்டன் பிணமாக மிதந்தார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மணிகண்டன் குடிபோதையில் தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News