உள்ளூர் செய்திகள்
வேலூர் சாஸ்திரி நகரில் முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு
வேலூர் சாஸ்திரி நகரில் முழுநேர ரேசன் கடை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கூட்டுறவு துறை துணை பதிவாளர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
வேலூர் சாஸ்திரி நகரில் பகுதி நேர ரேசன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-&க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் உள்ளனர்.செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டுமே ரேசன் கடை திறக்கப்படுகிறது.
இதனால் 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
பலர் கூலித் தொழிலாளர் களாக இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் வந்து பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படு கின்றனர்.
பகுதி நேரமாக செயல்படும் இந்த கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழு நேர ரேசன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.