உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது

Published On 2022-04-05 15:19 IST   |   Update On 2022-04-05 15:19:00 IST
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் பகுதியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சோமசுந்தரம் நகரில் சந்தேகிக்கும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

அதேபோன்று சத்தியவாணிமுத்து நகரிலும் வாலிபர் ஒருவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News