உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையத்தை சுற்றி குப்பை கூழம் மாக உள்ள காட்சி

பாணாவரம் போலீஸ் நிலையத்தை சுற்றி குப்பை கூழம்

Published On 2022-04-05 15:19 IST   |   Update On 2022-04-05 15:19:00 IST
பாணாவரம் போலீஸ் நிலையத்தை சுற்றி குப்பை கூழமாக உள்ளது.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீஸ் நிலையம் காம்பவுண்ட் சுவரை சுற்றி பிளாஸ்டிக் குப்பைகள் மலைபோல் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

போலீஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் இருப்பதால் சில பயணிகள் பிளாஸ்டிக் கவரில் சாப்பாடு வாங்கிவந்து அதை ரெயில்வே பிரிட்ஜ் அருகே அமர்ந்து சாப்பிட்டு விட்டு போலீஸ் ஸ்டேஷன் அருகே வீசி விடுகின்றனர்.

இதை போலீசாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. மேலும் பல நாட்களாக அந்த பிளாஸ்டிக் குப்பைகளை பாணாவரம் பஞ்., நிர்வாகம் அப்புறப் படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் பாணாவரம் சுற்றியுள்ள சில பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் கொசுப் புழுக்கள் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

உடனடியாக பஞ்சாயத்து நிர்வாகம் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News