உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுவதையொட்டி நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிர

ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 125 வீடுகள் இடிப்பு

Published On 2022-04-05 14:51 IST   |   Update On 2022-04-05 14:51:00 IST
ஏரிக்கரைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 125 வீடுகள் இடிக்கப்பட்டன.
அரியலூர் :

அரியலூர் நகராட்சிக்குட் பட்ட 14 ஆவது மற்றும் 7 ஆவது வார்டுகளில் உள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரசநிலையிட்டான் ஏரிக் கரைகளை ஆக்கிரமித்து கடந்த 50 ஆண்டுகளாக 125 குடும்பத்தினர் வீடுகளை கட்டி வசித்து வந்தனர்.

இந்நிலையில், உயர்நீதி மன்றம் உத்தரவுப்படி, நீர் நிலையங்களிலுள்ள ஆக்கிர மிப்புகளை தமிழக அரசு அகற்றி வருகிறது. அதன்படி, அரியலூர்  மாவட்டத்தில் செந்துறை,  ஆண்டிமடம் பகுதி களில் ஏரிகள் மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிர மிப்புகள் மற்றும் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப் புகளை அகற்றும் பணிகளில் வட்டாட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அரியலூர் நகரிலுள்ள குறிஞ்சான்குளம் மற்றும் அரச நிலையிட்டான் ஏரிகரைகளில் ஆக்கிரமித்து அங்கு வசித்து வரும் குடும்பத் தினர்களுக்கு, உடனடி ஆக்கி ரமித்தவர்களுக்கு வருவாய் துறையினர் பல முறை எச்ச ரிக்கை அளித்தும், அவர்கள் அங்கிருந்து காலி செய்ய வில்லை.

இந்நிலையில், வட்டாட்சி யர் ராஜமூர்த்தி தலைமையில், 100&க்கும் மேற்பட்ட காவல் துறையினர் முன்னிலையில் மேற்கண்ட ஏரிக்கரைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டி ருந்த 125 வீடுகளை, 3 ஜேசி எந்திரம் மூலம் அகற்றும் பணிகள்   திங்கட்கிழமை தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தாங்களாகவே முன்வந்து வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டனர்.

இப்பணி இன்றும் தொடரும் என்றும், ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து வீடுகளை யும் அப்புறப்படுத்தியதோடு அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்ப டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. மேலும், அகற்றப்படும் வீட்டு உரிமையாளர்களில் வீடு இல்லாதவர்கள் கண்ட றியப்பட்டு   அவர்களுக்கு சமத்துவபுரத்துக்கு அருகா மையில் இடம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சத்திரம் அருகே சாலை மறியலில்  ஈடுபட்ட  11  பேர் கைதாகினர்.

Similar News