உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கஞ்சா விற்ற வழக்கில் வாலிபர் கைது

Published On 2022-04-04 15:57 IST   |   Update On 2022-04-04 15:57:00 IST
கஞ்சா விற்ற வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காட்டில் கீரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற வேம்பங்குடி கிழக்கு பகுதியை சேர்ந்த அகிலேஷ்  வயது 28 என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில்  அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து  கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News