உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவிலில் தேர்திருவிழா

Published On 2022-04-04 15:29 IST   |   Update On 2022-04-04 15:29:00 IST
கல்லங்குறிச்சி கலியபெருமாள் கோவில் தேர் திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அரியலூர்:

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கிராமத்தில்  பழமையான அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  பத்து நாட்கள் பெறும் திருவிழா மிக சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக   கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததினால் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு 10.4.22ம் தேதி ராமநவமி அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

கொடியேற்று விழா, சூரிய வாகனம்,  வெள்ளிப்பல்லக்கு, வெள்ளி சேஷ வாகனம்,  வெள்ளி கருடவாகனம், படத்தேர், வெள்ளி யானை வாகனம், திருக் கல்யாணம்,   கண்ணாடி  

பல்லக்கு, வெள்ளி  சிம்ம வாகனம், புன்னை மரம் வாகனம், வெண்ணைத்தாழி, வெள்ளி குதிரை வாகனம் உட்பட பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது. 18ம் தேதி தேர் திருவிழாவும், 19ம் தேதி ஏகாந்த சேவையும் மிக சிறப்பாக நடைபெறும்.

திருவிழா காலங்களில் தினசரி நாதஸ்வர இசை, திருமஞ்சனம், கிளாரிநெட், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டியம், வேத பாராயணம், பஜனைகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பக்தர்கள் வருகையை முன்னிட்டு தண்ணீர் பந்தல், அன்ன தானம், தங்கும் வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் அமைத்துத் தரப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சி, தஞ்சை,  கும்பகோணம், சேலம், துறையூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து விழாக்கால சிறப்பு பஸ் வசதிகள் இயக்கப்பட உள்ளது.  

18ம் தேதி அதிகாலையில் சின்ன தேரில் ஆஞ்சநேயர் சுவாமியும், பெரிய தேரில் அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமாதேவியருடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

தேரினை ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாட்சியார் அவர்களின் மகன்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின் றனர்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழா வினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி உத்தரவின்பேரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும், அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்படுகிறது.

Similar News