உள்ளூர் செய்திகள்
முப்பது வெட்டி கிராமத்தில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடந்த காட்சி.

ஆற்காடு முப்பது வெட்டி கிராமத்தில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்

Published On 2022-04-04 15:03 IST   |   Update On 2022-04-04 15:03:00 IST
ஆற்காடு முப்பது வெட்டி கிராமத்தில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.
ஆற்காடு:

ஆற்காடு அடுத்த முப்பது வெட்டி வேளாளர் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தரவள்ளி உடனுறை ஸ்ரீ சோமநாத ஈஸ்வரர் கோயில் உள்ளது. 

இந்த கோவிலில் உலக நன்மை வேண்டியும் மழை வளம் பெருகவும் மக்கள் நோய் நொடியின்றி வாழவும் ஆற்காடு பஞ்சாங்க கணிதர் சுந்தர்ராஜன் முன்னிலையில் மகா சிறப்பு யாகம் நடந்தது.
 
முன்னதாக ஸ்ரீ சரபேஸ்வரர், வாராகி, பிரித்திங்கரா தேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து யாக குண்டத்தில் பல்வேறு மங்கல பொருட்கள் உணவு தானியங்கள் போடப்பட்டது மந்திரங்கள் ஓதப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.

பின்னர் இரண்டு மூட்டை மிளகாய் போடப்பட்டு மகா பிரித்திங்கரா யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News