உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்
சோளிங்கரில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேரிமெக்ளின் நடுநிலைப் பள்ளியில் ஜப்பான் ஷீட்டோ ரீயூ கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் சோளிங்கர் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டாமி இணைந்து நடத்தும் கராத்தே பள்ளி மாணவ மாணவிகளுக்கு தகுதி அடிப்படையில் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை பயிற்சியாளர் கார்த்தி தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சியாளர்கள் பொன்ஜோதிகுமார், ஆனந்தி, கோபிநாத், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஜப்பான் ஷீட்டோ ரீயூ கராத்தே பயிற்சிபள்ளியின் இந்தியா தலைவர் ரமேஷ், சோளிங்கர் நகராட்சி துணை தலைவர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தகுதி அடிப்படையில் கருப்பு பச்சை நீலம் மஞ்சள் வெள்ளை உள்ளிட்ட பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.
தற்போது பெரும்பாலான இடங்களில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிக அளவில் இருப்பதால் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கராத்தே பயிற்சி பெறுவது அவசியமாகும்.
மேலும் இந்த கராத்தே பயிற்சி பள்ளியில் அதிக அளவில் பெண் பிள்ளைகள் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு கறுப்புப் பட்டை பெற்றது. மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து சிலம்பம், துப்பாக்கிச்சுடுதல், வில் வித்தை தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தனர்.