உள்ளூர் செய்திகள்
சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்கள் பறிமுதல்
அந்தியூர் பகுதியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூரில் இருந்து தினமும் ஏராளமான வாக னங்கள் பல்வேறு பகுதி களுக்கு சென்று வருகின்றன. இதனால் அந்தியூர் பகுதியில் நாளுக்கு நாள் வாக னங்களின் எண்ணிக்கை அதிகரித்து கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் வாகன ஓட்டிகள் பலர் விதிமுறைகளை மீறி செல்வதாக புகார்களங் வந்தன. இதையடுத்து பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற் கொண்டார். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய் தார்.
அப்போது 7 மினி ஆட்டோகள் தகுதிச் சான்று மற்றும் உரிமைச் சான்று இல்லாமல் வந்தது. இதே போல் 2 டெம்போ வேன் கள் சாலை வரி தகுதிச் சான்று இல்லாமலும், ஒரு ஆட்டோ ஒன்றுக்கு எந்த வகை சான்றும் இல்லா மலூம், பொக்லைன் எந்திரம் ஒன்று பதிவு இல்லாமலும், ஒரு கால் டாக்சி எப்.சி. இல்லாமலும், 2 ஆம்னி பஸ்கள் சாலை வரி கட்டாமலும் வந்தது தெரிய வந்தது.
இதையத்து சரியான சான்றிதழ்கள் இல்லாமல் வந்த 15 வாகனங்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.