உள்ளூர் செய்திகள்
அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் 2 புதிய கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முதன்மைக் கட்டிடத்தை ஒட்டி 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளும், குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை அடையாறில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தற்போது குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 வகுப்பறைகளும் 48 விடுதி அறைகளும் உள்ளன.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் 6 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளும், 15 புதிய விடுதி அறைகளும் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முதன்மைக் கட்டிடத்தை ஒட்டி 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளும், குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
சென்னை அடையாறில் உள்ள அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தற்போது குளிர்சாதன வசதியுடன் கூடிய 10 வகுப்பறைகளும் 48 விடுதி அறைகளும் உள்ளன.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் 6 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளும், 15 புதிய விடுதி அறைகளும் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு திட்டமிட்டு, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பயிற்சியாளர்களின் வசதிக்காக தற்போதுள்ள முதன்மைக் கட்டிடத்தை ஒட்டி 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளும், குளிர் சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகளும் அடங்கிய இரண்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார்.