உள்ளூர் செய்திகள்
கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.

திடீரென உள்வாங்கிய கடல்

Published On 2022-04-03 12:59 IST   |   Update On 2022-04-03 12:59:00 IST
வேதாரண்யம் சன்னதி கடல் திடீரென உள்வாங்கியது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் சன்னதி கடல் திடீரென உள்வாங்கியது. கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கி உள்ளது.

இது குறித்து மீனவர்கள் கூறும்போது,

கடல் உள்வாங்குவது இயல்பான ஒன்றுதான். இருந்தாலும் தற்போது அதிக தூரத்துக்கு உள் வாங்கி உள்ளது. இதனால் கடல் அலை சத்தம் ஏதும் இல்லாமல் அமைதியாக ஏரி போல் காட்சியளிக்கிறது.

மேலும் கடலில் இருந்து கரைக்கு தள்ளப்பட்ட சேர் அலை இல்லாததால் அப்படியே படிந்து காணப்படுகிறது. மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு வந்த உடன் சேறு அலையால் அடித்து செல்லப்பட்டு விடும் என்றனர்.

Similar News