உள்ளூர் செய்திகள்
ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர்.

ஆபத்தான நிலையில் ‘டிரான்ஸ்பார்மர்’

Published On 2022-04-03 12:49 IST   |   Update On 2022-04-03 12:49:00 IST
நாகை தெத்தி புதுரோட்டில் வீட்டின் வாசலில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்-.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர் அருகே தெத்தி புதுரோடு அருகாமையில் தொழில் பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு சோப்பு கம்பெனிக்காக அமைக்கப்பட்ட மின்மாற்றி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

5 ஆண்டுகளுக்கு காலமாக சோப்பு கம்பெனி இயங்காமல் உள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகள் பழமையான மின்மாற்றியின் சிமெண்ட் மின்கம்பங்கள் காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இப்பகுதி வழியாக தினந்தோறும் ஆயிரக் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அச்சத்தோடு கடந்து செல்கின்றனர்.

மேலும் காற்றுடன் மழை பெய்யும் நேரத்தில் விழும் அபாயத்தில் உள்ளதால் வீட்டு வாசலில் உள்ள மின்மாற்றியை பழுது நீக்கம் செய்வதோடு வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News