உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை சேர்வராயன் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அகற்றும் பணியினை கலெக்டர் கவிதாராமு பார்வ

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

Published On 2022-04-03 12:16 IST   |   Update On 2022-04-03 12:16:00 IST
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகராட்சியில்   யானைமால் தெருவில் உள்ள சேர்வராயன்குளத்தில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கலெக்டர்  கவிதா ராமு, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் கோவில்பட்டியில் உள்ள சுப்பம்மாள் சமுத்திரம், சந்தைப்பேட்டை அருகில் உள்ள அக்கச்சியாகுளம், ராஜகோபாலபுரம் காக்காச்சிஊரணி, பழையபேருந்து நிலையம் குமுந்தான்குளம் ஆகிய இடங்களை பார்வையிட்ட  கலெக்டர் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர் கவிதாராமு தெரிவித்ததாவது: நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமணம் அகற்ற வேண்டும் என்ற மாண்பமை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுரைப்படி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்கள் அனைத்தும் எவ்வித தயவு தாட்சயமின்றி அகற்றப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடை செய்யும் நபர்கள் மீது சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைப் புறம்போக்கு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமணங்களை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும்.  

ஆக்கிரமணங்களை அகற்றிட தவறும் பட்சத்தில் அரசே தாமாக முன்வந்து ஆக்கிரமணங்களை அகற்றி, அதற்குரிய செலவினங்களை சம்மந்தப்பட்ட ஆக்கிரமணதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

Similar News