உள்ளூர் செய்திகள்
பள்ளிக் கல்வித்துறை இயக்ககம்

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும்- பள்ளிக்கல்வித்துறை

Published On 2022-04-03 03:59 GMT   |   Update On 2022-04-03 03:59 GMT
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இந்நிலையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை இந்த ஆண்டுக்கான இறுதி தேர்வு நடைபெறாது என்று நேற்று செய்தி பரவியது. மேலும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு வரை மட்டுமே ஆண்டுத்தேர்வு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.

அதனால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை  பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. குஜராத் தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற முடியாது- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் உறுதி
Tags:    

Similar News