உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

Published On 2022-04-02 16:08 IST   |   Update On 2022-04-02 16:08:00 IST
அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் முனுசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகன் மோகன் (வயது 66) இவருக்கும் இவரது தம்பி சதாசிவம் (63) ஆகிய இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது நேற்று முன்தினம் இரவு மோகன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த இவரது தம்பி சதாசிவம் தான் மறைத்து வைத்து இருந்த சூரிய கத்தியால் மோகன் வயிற்று மீது குத்தினார். 

அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்கு பதிவு செய்து சதாசிவம் கைது செய்தனர்.

Similar News