உள்ளூர் செய்திகள்
குழித்துறையில் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை
குழித்துறையில் தாய் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி:
குழித்துறையை அடுத்த நட்டாலம், உழுதவிளையை சேர்ந்தவர் விஜயராகவன். (வயது 43). தொழிலாளி. இவருக்கு திருமணமாக வில்லை. இவர் தாயாருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயார் உடல் நலக்குறைவால் இறந்து போனார்.
அதன்பின்பு விஜயரா கவன் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் சோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் விஜயராக வன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி விஜயராகவன் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.