உள்ளூர் செய்திகள்
புதுவையில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை- 5 பேர் கைது
புதுவையில் ரவுடிகள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை செய்து 5 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு வீசி எதிராளிகளை கொலை செய்யும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.
மேலும் முக்கிய ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர். அதோடு ரவுடிகளை ஊருக்குள் நுழையவும் தடை விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா தலைமையில் உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை ஆகிய போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வாணரப்பேட்டை, ரோடியர்பேட், ஆட்டுபட்டி, பெரியார்நகர், அனிதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், ரவிக்குமார், சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.
போலீசார் சோதனை நடத்த வருவதை அறிந்துகொண்ட ஒருசில ரவுடிகள் வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
அதேவேளையில் முதலியார்பேட்டை பகுதியில் 2 ரவுடிகளையும், ஒதியஞ்சாலை பகுதியில் 3 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு வீசி எதிராளிகளை கொலை செய்யும் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகின்றனர்.
மேலும் முக்கிய ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கின்றனர். அதோடு ரவுடிகளை ஊருக்குள் நுழையவும் தடை விதித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா தலைமையில் உருளையன்பேட்டை, ஒதியஞ்சாலை, முதலியார்பேட்டை ஆகிய போலீஸ் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வாணரப்பேட்டை, ரோடியர்பேட், ஆட்டுபட்டி, பெரியார்நகர், அனிதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், ரவிக்குமார், சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.
போலீசார் சோதனை நடத்த வருவதை அறிந்துகொண்ட ஒருசில ரவுடிகள் வீடுகளை பூட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.
அதேவேளையில் முதலியார்பேட்டை பகுதியில் 2 ரவுடிகளையும், ஒதியஞ்சாலை பகுதியில் 3 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர்.