உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி வர்த்தக சபை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
புதுவை வர்த்தக சபை புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை வர்த்தசபையின் நிர்வாகக்குழு தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த 2019--ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதம் 31--ந் தேதியுடன் முடிவ டைந்தது.
இதையடுத்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடந்தது. அதில் தலைவராக குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் துணைத் தலைவராக ரவி, பொதுச் செயலாளராக ஆனந்தன், இணை பொதுச் செயலாள ராக முகம்மது சிராஜ், பொருளாளராக வி.எம்.எஸ்.ரவி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சிவசங்கர் எம்.எல்.ஏ., தேவக்குமார், ஞானசம்பந்தம், நமச் சிவாயம், ராமமூர்த்தி, ஜெக தீசன், பிரகாஷ், அமுர்த கண்டேசன், குமார், ராஜவேல், ஜெய்கணேஷ் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற தொழிலாளர் அதிகாரி கலியபெருமாள், ஆறுமுகம், சுவாமிநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் 2025--ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.