உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகளுடன் டாக்டர் ரவி உரையாடிய காட்சி.

மூலிகை , தானியங்களுக்கு மக்களிடம் வரவேற்பு-டாக்டர் ரவி தகவல்

Published On 2022-04-02 09:51 IST   |   Update On 2022-04-02 09:51:00 IST
மூலிகை , தானியங்களுக்கு மக்களிடம் அதிகமான வரவேற்பு உள்ளது என சுசான்லி டாக்டர் ரவி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

திருச்சி தோட்டக்கலை மற்றும் ஆய்வு மைய பெண்கள் கல்லூரி மற்றும் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு படிக்கும் 23 மாணவ-மாணவிகள் சுசான்லி டாக்டர் ரவியை சந்தித்து பேசினார்கள். 

மூலிகைகளின் வளர்ச்சி, அதன் மூலம் கிடைக்கும் வியாபார வாய்ப்பு, மானியத் துடன் கூடிய மூலிகைகள் பற்றிய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

சித்தா, ஆயுர்வேதா மருந்துகளை தயாரிக்கும் தி சுசான் சிலி குரூப்சின் வீ ஹெர்பல் கேர் நிறுவனம் மற்றும் சாய்டீரி ஹெர்பல்ஸ் நிறுவனங்களின் மூலிகை மருந்துகளை தயாரிக்கும் முறை கடந்த 10 ஆண்டுகளில் இவற்றின் வள ர்ச்சி குறித்தும் விளக்கினார்.

மேலும் அவர் கூறும் போது, தற்சமயம் மூலிகைகள் மற்றும் குறு, சிறு தானியங்கள் குறித்து மக்களிடம் அதிக மான வரவேற்பு உள்ளது. தேசிய மூலிகை வாரியம் சில குறிப்பிட்ட மூலிகை மற்றும் வேளாண்மைக்கு 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. 

இவற்றை பயன்படுத்தி மூலிகை சாகுபடி செய்து நேரடியாக மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க   லாம் என்றும், கடந்த 30 வருடங்களாக குறுசிறு தானியங்கள் மற்றும் மூலிகைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளதாக வும், இக்காலகட்டங்களில் விவசாயம் உள்ளிட்ட, மூலிகை சாகுபடிக்கு மிகவும் சிறப்பானது என்றும் கூறினார். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Similar News