உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மீனவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர்

Published On 2022-04-01 15:44 IST   |   Update On 2022-04-01 15:44:00 IST
தமிழக எல்லைக்குள் புகுந்து 3 மீனவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் சதிஷ், ஆறுமுகம், தமிழ்செல்வன். மீனவர்கள். 

இவர்கள் கோடியக் கரைக்கு தென்கிழக்கே லெனின் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள் பறித்து கடலில் கொட்டியதோடு 50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதபடுத்தினர். 

பின்னர் 3 மீனவர்களிடம் இருந்த செல்போன்களை எடுத்து சென்று விட்டனர். 

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயம் ஏற்பட்ட மீனவர்கள் கரை திரும்பி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.பின்னர் 3 பேரும் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். 

இதன்பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் அத்துமீறி தமிழக எல்லைக்குள் புகுந்ததோடு, தமிழக மீனவர்களை தாக்கி பல லட்சம் பொருட்களை பறித்து சென்று மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கி விட்டனர்.
 
எனவே இலங்கை கடற்படையினர் மீது தமிழக எல்லைக்குள் புகுந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News