உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் பகுதியில் மழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு
குடியாத்தம் பகுதியில் மழையால் சேதமடைந்த பாலங்கள் சீரமைக்க ரூ.6 கோடி ஒதுக்கி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் கே.கே.வி. அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் குசலகுமாரி சேகர், உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர்கள் குகன், புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கூறினார்கள் ஒன்றிப்பு கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்துகொள்ளும் வகையில் மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்திலேயே சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலங்கள் புதியதாக கட்ட அரசுக்கு கோரிக்கை விடுப்பது.
குடியாத்தம் நகரில் உள்ள கால்நடை மருத்துவ மனையை கொண்ட சமுத்திரம் பகுதிக்கு மாற்ற வேண்டும்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட குடியாத்தம் ஒன்றிய பகுதியில் பாலங்களுக்கு தற்போது நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 6 பாலங்கள் அமைக்க ரூபாய் 6கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.
சீவூர்-மூங்கப்பட்டு செல்லும் சாலை, அக்ராவரம் நடுகட்டை செல்லும் பகுதி, சூராளூர் பகுதி, மூங்கப்பட்டு- மீனூர்மலைமலை, பட்டு- ஆலாம்பட்டரை, உப்பரபள்ளி 6 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும்.
நகரின் மையப்பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் இடிக்கப்பட்டு விரைவில் புதிதாக நவீன வசதிகள் உடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் அதே இடத்தில் கட்டப்பட்ட உள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டது.
ராமாலை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள்.