உள்ளூர் செய்திகள்
பெண் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கறம்பக்காடு இனாம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி ஷாலினி (வயது 25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஷாலினி வீட்டில் தூக்கில் தொங்கியதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு அறந்தாங்கி அர சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.