உள்ளூர் செய்திகள்
கவர்னர் தமிழிசை பேனர் கிழிப்பு

புதுவை அரியாங்குப்பத்தில் கவர்னர் தமிழிசை பேனர் கிழிப்பு

Published On 2022-03-31 17:23 IST   |   Update On 2022-03-31 17:23:00 IST
புதுவை அரியாங்குப்பத்தில் கவர்னர் தமிழிசை பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாகூர்:

புதுவை தனியார் தையல் பயிற்சி மையம் சார்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில், கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்த கவர்னர் தமிழிசை, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோரை வரவேற்று அரியாங்குப்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

புதுவை - கடலூர் சாலை அரியாங்குப்பம் புதுப்பாலம் அருகில் வைக்கப்பட்டு இருந்த கவர்னர் படம் பொறித்த பேனரை யாரோ மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தினர்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பேனரை கிழித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News