உள்ளூர் செய்திகள்
சோளிங்கரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

சோளிங்கரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-03-31 15:40 IST   |   Update On 2022-03-31 15:40:00 IST
சோளிங்கர் அருகே நீர்நிலைபகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.
சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் பகுதியில் உள்ள நெட்டேரி, பெரிய ஏரி பகுதிகளில் 2.6 ஹெக்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் 8 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சோளிங்கர் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறை உதவி பொறியாளர் சேரலாதனுக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் சோளிங்கர் வருவாய் துறையினர் மூலம் நெட்டேரி, பெரிய ஏரி பகுதியில் ஆக்ரமிப்பு செய்திருந்த பகுதிகளை அளவிட்டனர். அதனை தொடர்ந்து தாங்களாக முன் வந்தது ஆக்ரமிப்புகளை அகற்ற கால அவகாசத்தை சோளிங்கர் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறையினர் அளித்தனர். 

இந்நிலையில் நேற்று சோளிங்கர் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறை உதவி பொறியாளர் சேரலாதன் தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் வெற்றி குமார், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கர், கொண்டபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் நெட்டேரி, பெரிய ஏரி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து செய்திருந்த 2.6 ஹெக்டர் நிலத்தையும் நிலத்தை சுற்றி இருந்த அமைந்திருந்த வேலி மற்றும் வரப்புகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி நீர்பிடிப்பு நிலத்தை பொதுப்பணித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

நெட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதே நீர்பிடிப்பு பகுதியில் ஐந்து வீடுகளில் மின் இணைப்புகளும், பெரிய ஏரி பகுதியில் மூன்று வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

மேலும் இனி வரும் காலங்களில் பொதுப்பணித்துறையில் சொந்தமான ஏரி ஏரி கால்வாய், நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் சேரலாதன் எச்சரித்தார்.

Similar News