உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

காட்பாடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2022-03-31 15:34 IST   |   Update On 2022-03-31 15:34:00 IST
காட்பாடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் (வயது 60) நேற்று அந்த பகுதியில் உள்ள கம்பெனியில் மாவு அரைத்துவிட்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.

திடீரென அவர்கள் பாப்பாத்தி அம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். ஆனால் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News