உள்ளூர் செய்திகள்
கொரோனா இல்லாத மாநிலமாக மாறிய புதுவை- பொதுமக்கள் மகிழ்ச்சி
அரசு மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருந்தது.
இந்த நிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு புத்தாண்டு கொண்டாட வந்தவர்களால்தான் கொரோனா தொற்று அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ஜனவரி மாதத்துக்கு பின் புதுவையில் கொரோனா தொற்று மீண்டும் குறைய தொடங்கியது. ஒரு நாள் பாதிப்பு 10-க்கும் கீழ் சென்றது. ஒரு சில நாட்களில் தொற்று இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் 222 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் குணமடைந்தனர். இதனால் புதுவை மாநிலம் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறி உள்ளது.
அரசு மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் புதுவையில் ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 919 பேர் 2-வது தவணை தடுப்பூசியையும், 105 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
இதுவரை 16 லட்சத்து 36 ஆயிரத்து 901 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருந்தது.
இந்த நிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு புத்தாண்டு கொண்டாட வந்தவர்களால்தான் கொரோனா தொற்று அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
ஜனவரி மாதத்துக்கு பின் புதுவையில் கொரோனா தொற்று மீண்டும் குறைய தொடங்கியது. ஒரு நாள் பாதிப்பு 10-க்கும் கீழ் சென்றது. ஒரு சில நாட்களில் தொற்று இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் 222 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் குணமடைந்தனர். இதனால் புதுவை மாநிலம் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாறி உள்ளது.
அரசு மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக புதுவை கொரோனா இல்லாத மாநிலமாக மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் புதுவையில் ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 919 பேர் 2-வது தவணை தடுப்பூசியையும், 105 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
இதுவரை 16 லட்சத்து 36 ஆயிரத்து 901 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.