உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் மழை நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2022-03-31 15:08 IST   |   Update On 2022-03-31 15:08:00 IST
கந்தர்வகோட்டையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

போஷன்   பக்வாடாநீர் மேலாண்மை  மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ரேவதி தலைமை தாங்கினார்.

கந்தர்வகோட்டை வட்டாட்சியர்  பொறுப்பு   அலுவலர் தயாவதி கிறிஸ்டினா பேரணியை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி  நகரின்  முக்கியவீதிகள் வழியாக சென்று காந்தி சிலையில்  முடிவடைந்தது. பேரணியில் மழைநீர்  சேகரிப்பு பற்றிய பதாகைகளை  ஏந்தி   அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News