உள்ளூர் செய்திகள்
மரணம்

மாமல்லபுரத்தில் விடுதி மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

Published On 2022-03-31 12:57 IST   |   Update On 2022-03-31 12:57:00 IST
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் விடுதி மாடியில் இருந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:

பாண்டிச்சேரியை சேர்ந்தவர் முகேஷ்,(வயது 26) தனியார் கட்டுமான நிறுவன ஊழியர். இவர் கடந்த 27-ந் தேதி, நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.

பின்னர் அவர்கள் கடற்கரை கோவில் வடபுறம் மீனவர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தர். இரவு முகேஷ் மதுபோதையில் வந்த போது விடுதியின் முதல் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த முகேஷ் பலியானார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News