உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சட்டபேரவை மனுக்கள் குழுவிற்கு பொதுபிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

Published On 2022-03-30 15:33 IST   |   Update On 2022-03-30 15:33:00 IST
சட்டபேரவை மனுக்கள் குழுவிற்கு பொதுபிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2021-22-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு வேலூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்சினைகள் குறித்து மனுக்களை மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்ட மனுக்களை சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும், பல ஆண்டுகளாக அரசு அலுவலகம் தீர்க்கப்படாமல் இருக்கும் போது பிரச்சினைகள் குறித்தாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

தனிநபர் குறை, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள், வங்கி கடன் அல்லது தொழில் கடன் அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் உள்ளடக்கியதாக இருத்தல் கூடாது.

மனுக்கள் குழு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும், ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும். ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

மனுதாரர் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டு அறியப்படும். 

இதுகுறித்து மனுதாரர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். வருகிற 20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News