உள்ளூர் செய்திகள்
ஆற்காட்டில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்
ஆற்காட்டில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் வேன் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு பகுதியைச் சேர்ந்த சான்ட்டோ பீட்டர் (வயது 29) என்பது தெரியவந்தது.
அவரையும், அரிசி கடத்தலுக்கு உதவிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆனந்தராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.