உள்ளூர் செய்திகள்
ரத்தினகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ரத்தினகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரியை அடுத்த தென்னந்தியலம் பகுதியை சேர்ந்தவர் கிரி பாபு (வயது 31). இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு மேல்விசாரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.