உள்ளூர் செய்திகள்
தொழிலாளி இடத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க. நிர்வாகி
நாகை அருகே தொழிலாளி இடத்தை ஆக்கிரமித்த அ.தி.மு.க. நிர்வாகியிடம் கொட்டகையை பிரிக்ககோரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் & அதிர்ஷ்ட வாணி தம்பதியினர். இவர்கள் அதே தெருவில் உள்ள ஒரு இடத்தை வீடு கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடு கட்டாமல் இடத்தை போட்டு வைத்திருப்பதை பார்த்து வந்த அந்த பகுதியின் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மற்றும் அவருடைய தந்தை தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆக்கிரமிக்க திட்டம் போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சுப்ரமணியன் தினக்கூலி வேலைக்கு சென்றதை பார்த்த அவர்கள், சரசரவென கீற்று கொட்டகை ஒன்றை அவ்விடத்தில் கட்டி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
பின்னர் கொட்டகை அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இடத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திர சேகரின் சொத்து பட்டா மற்றும் ஆவணங்களை சரிபார்த்து இடத்தை மீட்டுகொடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து கொட்டகையின் உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்திய போலீசார், கொட்டகையை பிரிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை அடுத்துள்ள பொரவச்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சுப்ரமணியன் & அதிர்ஷ்ட வாணி தம்பதியினர். இவர்கள் அதே தெருவில் உள்ள ஒரு இடத்தை வீடு கட்டுவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினர்.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக வீடு கட்டாமல் இடத்தை போட்டு வைத்திருப்பதை பார்த்து வந்த அந்த பகுதியின் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோமதி மற்றும் அவருடைய தந்தை தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆக்கிரமிக்க திட்டம் போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து சுப்ரமணியன் தினக்கூலி வேலைக்கு சென்றதை பார்த்த அவர்கள், சரசரவென கீற்று கொட்டகை ஒன்றை அவ்விடத்தில் கட்டி இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
பின்னர் கொட்டகை அமைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த இடத்தின் உரிமையாளர் சுப்ரமணியன் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திர சேகரின் சொத்து பட்டா மற்றும் ஆவணங்களை சரிபார்த்து இடத்தை மீட்டுகொடுக்க நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து கொட்டகையின் உள்ளே இருந்த பொருட்களை அப்புறப்படுத்திய போலீசார், கொட்டகையை பிரிக்க நடவடிக்கை எடுத்தனர். அப்பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.