உள்ளூர் செய்திகள்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் அருகேயுள்ள பழைய ஜெயங் கொண்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற அறிவானந்தம் (வயது 28).
எலெக்ட்ரிஷியன் பணி செய்து வரும் இவர், அவர் வீட்டருகே வசிக்கும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2&ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழும் மற்றும் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அறிவானந்தம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் அருகேயுள்ள பழைய ஜெயங் கொண்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்கிற அறிவானந்தம் (வயது 28).
எலெக்ட்ரிஷியன் பணி செய்து வரும் இவர், அவர் வீட்டருகே வசிக்கும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2&ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழும் மற்றும் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அறிவானந்தம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.