பண்ருட்டியில் பூட்டிய வீட்டில் நகை- பணம் கொள்ளை
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம்கணபதி நகர், இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (45).இவர் பண்ருட்டி ஜவகர் தெருவில் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி கொண்டு சிதம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இன்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 4 கிராம் தங்க நகை மற்றும் பத்தாயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கடலூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகைநிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.