உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2022-03-28 08:38 GMT   |   Update On 2022-03-28 08:38 GMT
ஆலங்குடியில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்த முகமது உசேன் மகன் அபுபக்கர் சித்திக் வயது 14. இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்  சகநண்பர்களுடன் சேர்ந்து ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை உடையார்தெரு புதுகுளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார்.

பின்னர் சகநண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் குளித்து உள்ளனர். அப்போது அபுபக்கர்சித்திக்  குளத்தில் மூழ்கினார்.  உடனே மற்ற நண்பர்கள் சத்தம் போட்டனர்.

இதைத் தொடர்ந்துஅக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய அபுபக்கர் சித்திக்கை மீட்டு சிகிச்சைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அபுபக்கர் சித்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News