உள்ளூர் செய்திகள்
விஷ்ணுகுமார், அன்பழகன், சரவண பாண்டி

நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேருக்கு சிறை தண்டனை

Published On 2022-03-27 12:56 IST   |   Update On 2022-03-27 12:56:00 IST
பொன்னமராவதியில் நகைப்பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கருப்பையா மனைவி தருமு அம்மாள் வயது60. இவர் கிளிக்குடி பிரிவு ரோடு பாலம் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் பொன்னமராவதிக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்பது போல் நடித்து  தருமு அம்மாள் கழுத்தில் கிடந்த 4பவுன் செயினை பறித்து கொண்டு  ஆட்டோவில் 2 பேரும்,  மோட்டார் சைக்கிளில் ஒருவரும்  தப்பி ஓடினர்.

தருமு அம்மாள்  அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்கள் திருடனை விரட்டி பிடித்து 2 பேரை போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார். பின்னர் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில்  அவர்கள் மதுரை கீழதுரை வேதபிள்ளை தெருவை சேர்ந்த சரவண பாண்டி வயது 29,மதுரை ஜெய்ந்தபுரம்  விஷ்னுகுமார் ,  மதுரை மேல அணுப்பாண்டி அன்பழகன் 38 என்பது தெரிய வந்தது.

பின்னர் 3 பேரையும்   காரையூர் போலீசார்  கைது செய்து இலுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.   நீதிமன்றத்தில் சாட்சிகளை விசாரணை செய்து குற்றவாளிகள் 3 பேருக்கும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டணை விதித்து இலுப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News