உள்ளூர் செய்திகள்
உலக காசநோய் தினம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

காசநோய் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-03-27 12:31 IST   |   Update On 2022-03-27 12:31:00 IST
கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காசநோய் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
புதுக்கோட்டை:

கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் காசநோய் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமாரவேல் தலைமை வகித்தார்.  ரோட்டரி சங்கத்தின்  தலைவர் தட்சிணாமூர்த்தி செயலர் வெங்கடேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி அறிவியல் ஆசிரி யர் மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி சுவாமி நாதன் கலந்து கொண்டு காசநோய் பற்றிய  விழிப்புணர்வு    உரையாற்றினார்.

மேலும், காசநோய் பற்றி மாணவர்களின்    கேள்விகளுக்கு பதிலளித்து   பரிசுகள் வழங்கி   பாராட்டினார். முடிவில் ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

Similar News