உள்ளூர் செய்திகள்
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.

உலக தண்ணீர் தினம் கொண்டாட்டம்

Published On 2022-03-27 05:49 GMT   |   Update On 2022-03-27 05:49 GMT
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ், புதுவை மையம் இணைந்து உலக தண்ணீர் தினம் விழா கொண்டாடப்பட்டது.

மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி  வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் புதுவை சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் மற்றும் மேற் பார்வை பொறியாளர் சாய் சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News