உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

தகுதி சான்றில்லாத 15 வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-03-26 14:58 IST   |   Update On 2022-03-26 14:58:00 IST
நாகையில் நடைபெற்ற சோதனையில் தகுதி சான்றில்லாத 15 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் மற்றும், தஞ்சாவூர் துணைப் போக்குவரத்து ஆணையர்  உத்தரவின்பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 
நாகை எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு தினங்கள் நடைபெற்ற வாகன சோதனையில், அனுமதி சீட்டு இல்லாமல் ஓட்டிவந்த வாகனங்கள், தகுதி சான்று, காப்பு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் 
இல்லாமல் இயக்கி வந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

புதுச்சேரி மாநில சொகுசு ஆம்னி பஸ்கள்-2, மேக்சிகேப் வாகனங்கள்-3, சரக்கு வாகனங்கள்-2 மற்றும் இலகுரக சரக்கு வாகங்கள்-8 என 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வரியாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 10-ம் அபராதம் விதித்தனர். 

போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என வாகன ஓட்டிகளுக்கு நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News