உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான படிவம் வழங்கல்.

விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி

Published On 2022-03-26 13:25 IST   |   Update On 2022-03-26 13:25:00 IST
திருமருகல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான படிவம் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான படிவத்தை விவசாயிகளிடம் திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், அட்மா திட்ட வட்டார தலைவருமான செல்வ செங்குட்டுவன் வழங்கினார்.

அதே போல் புத்தகரம் மற்றும் ஆதினக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் விவசாயிகள் பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வடிவேல், மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் விஜியகணபதி, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி செயலாளர் குமார், கிளை செயலாளர் வெங்கடேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் லதாஅன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பவுஜியாபேகம் அபுசாலி, முகம்மது சாதிக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News