உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் சைதாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி

Published On 2022-03-25 09:54 GMT   |   Update On 2022-03-25 09:54 GMT
வேலூர் சைதாப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:

வேலூர் கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 55) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லதா 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.

இவர் நேற்று வழக்கம்போல் ஆட்டோ ஓட்டி விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். கைகால் முகம் கழுவிவிட்டு வீட்டு மாடியில் உள்ள பால்கனியில் உள்ள கைப்பிடி சுவரில் அமர்ந்து இருந்தார். 

அப்போது இருமல் வந்ததால் தும்மினார்.எதிர்பாராதவிதமாக மேலே இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் சுயநினைவை இழந்தார்.உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News