உள்ளூர் செய்திகள்
சித்தேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட காட்சி

பண்ருட்டி அருகே சித்தேரி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Published On 2022-03-25 15:23 IST   |   Update On 2022-03-25 15:23:00 IST
பண்ருட்டி அருகே செட்டிபாளையம் சித்தேரியில் பஞ்சாயத்து தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று காலை நடந்தது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்கு செட்டிபாளையத்தில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஏரி அளவிடும் பணி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அங்கு செட்டிபாளையம் சித்தேரியில் பஞ்சாயத்து தலைவர் சரசு தெய்வசிகாமணி தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் துணை தலைவர் மணிகண்டன், பஞ்சாயத்து கிளார்க்சங்கர், வார்டு உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News