உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் பல கோடி மோசடி செய்த வடமாநில கும்பல்
போலீசார் வடமாநில கும்பலை கண்டுபிடித்து உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையில் பிரபல காம்ப்ளக்ஸ் ஒன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கம்பெனியை ஒரு கும்பல் தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே ஜி.எஸ்.டி.எண், வங்கி கணக்குகள் தொடங்கினர்.
வியாபாரிகளிடமும், விவசாயிகளிடமும் கொள்முதல் செய்த, முந்திரி உள்ளிட்ட பொருட்களுக்கு உடனுக்குடன் காசோலை மூலம் பணம் வழங்கி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதித்தனர். இதனால் மற்ற எல்லா நிறுவனங்களை விட இந்த நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியது.
நல்ல விலை உடனுக்குடன் பணம் கிடைத்ததால் இவர்களிடம் பொருட்களை விற்பனை செய்ய அனைவரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் அனைவரது கவனத்தையும் திசை திருப்பி இந்த வடமாநில கும்பல் ஒரே நாளில் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வாங்கிய பொருட்களுக்கு காலையில் பணம் தருவதாக சொன்ன இந்த கும்பல் தங்களது செல்போன்களை சுவிட்ஆப் செய்து உள்ளது.
இதனால் அந்த நிறுவனத்தின் முன்பு திரண்ட பாதிக்கப்பட்டவர்கள் நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.
இவர்கள் கொடுத்த எல்லா ஆவணங்களும் போலியானது என தெரிய வந்தது. பண்ருட்டி பகுதி மக்களிடம் இருந்து பெற்ற முந்திரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இவர்கள் அனுப்பிய டிரான்ஸ்போர்ட் மூலம் விசாரித்து பார்த்ததில் எங்கு அனுப்பினார்கள் என்ற விவரம் இவர்களால் பெற முடியவில்லை.
நூதனமான முறையில் டிரான்ஸ்போர்ட் மூலம் அனுப்பி வழியிலே வேறு வண்டியில் மாற்றி அனுப்பியது தெரியவந்தது. இதனால் கவலை அடைந்த வியாபாரிகள், விவசாயிகள் கடலூர் போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வடமாநில கும்பலை கண்டுபிடித்து உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் சென்னை சாலையில் பிரபல காம்ப்ளக்ஸ் ஒன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கம்பெனியை ஒரு கும்பல் தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே ஜி.எஸ்.டி.எண், வங்கி கணக்குகள் தொடங்கினர்.
வியாபாரிகளிடமும், விவசாயிகளிடமும் கொள்முதல் செய்த, முந்திரி உள்ளிட்ட பொருட்களுக்கு உடனுக்குடன் காசோலை மூலம் பணம் வழங்கி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதித்தனர். இதனால் மற்ற எல்லா நிறுவனங்களை விட இந்த நிறுவனம் அசுர வளர்ச்சியை எட்டியது.
நல்ல விலை உடனுக்குடன் பணம் கிடைத்ததால் இவர்களிடம் பொருட்களை விற்பனை செய்ய அனைவரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் அனைவரது கவனத்தையும் திசை திருப்பி இந்த வடமாநில கும்பல் ஒரே நாளில் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
வாங்கிய பொருட்களுக்கு காலையில் பணம் தருவதாக சொன்ன இந்த கும்பல் தங்களது செல்போன்களை சுவிட்ஆப் செய்து உள்ளது.
இதனால் அந்த நிறுவனத்தின் முன்பு திரண்ட பாதிக்கப்பட்டவர்கள் நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தனர். இவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.
இவர்கள் கொடுத்த எல்லா ஆவணங்களும் போலியானது என தெரிய வந்தது. பண்ருட்டி பகுதி மக்களிடம் இருந்து பெற்ற முந்திரி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் இவர்கள் அனுப்பிய டிரான்ஸ்போர்ட் மூலம் விசாரித்து பார்த்ததில் எங்கு அனுப்பினார்கள் என்ற விவரம் இவர்களால் பெற முடியவில்லை.
நூதனமான முறையில் டிரான்ஸ்போர்ட் மூலம் அனுப்பி வழியிலே வேறு வண்டியில் மாற்றி அனுப்பியது தெரியவந்தது. இதனால் கவலை அடைந்த வியாபாரிகள், விவசாயிகள் கடலூர் போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வடமாநில கும்பலை கண்டுபிடித்து உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.