மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொது மக்கள் கடும் அவதி
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் அனைவரும் திண்டாடி வருகின்றனர். இந்த வெயிலை சமாளிக்க வெளியில் செல்லும் மக்கள் ஆங்காங்கே உள்ள மரங்களின் நிழலை தேடி செல்கின்றனர்.
வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இந்த கடுமையான வெப்பத்தை சமாளிக்க அவர்களுக்கு இருப்பது மின்சார பயன்பாடு மட்டுமே. இந்த மின்சார பயன்பாட்டினால் தான் மின்விசிறி, ஏர்கண்டிசன், ஏர் கூலர் போன்றவைகளால் கடுமையான வெப்பத்தை தணிக்க முடியும்.
தற்போது ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அனைவரும் வெப்பத்தை தாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இந்த மின்வெட்டு மேல்பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், வான்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் இந்த மின்வெட்டு அதிகமாக இருக்கிறது. இதனால் இரவில் சரியாக தூங்க முடியாமல் வியர்வை மழையில் நனைந்தபடி சரிவர தூக்கமின்றி கடுமையாக பாதிப்படைகின்றனர். அனைவருக்கும் தூக்கம் என்பது மிக அவசியம்.
காலையிலிருந்து மாலை வரை ஓயாது வேலை பார்த்த உடல் ஓய்வெடுக்கும் நேரம் இரவில் மட்டும்தான். இதனால் மக்கள் அனைவரும் நன்றாக தூங்கினால் தான் மறுநாள் அந்த வேலையை பார்க்க உடல் ஒத்துழைக்கும் ஆனால் அலுவலக வேலை மற்றும் பிற வேலைகளுக்கு செய்பவர்கள் இரவில் ஏற்படும் மின் வெட்டினாள் தூக்கமின்றி அவர்களால் சரிவர வேலை செய்ய முடிவதில்லை.
இந்த தூக்கமின்மையால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால் உரிய அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து ஏற்படும் தொடர் மின்வெட்டிற்கு முற்றுப் புள்ளி வைத்தால்தான் பொதுமக்கள் அனைவரும் நிம்மதியாக உறங்க முடியும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.