உள்ளூர் செய்திகள்
ரெயில் மோதி பலியான காளை

மாடு விடும் விழாவில் பாய்ந்து ஓடிய காளை ரெயிலில் சிக்கி பலி

Published On 2022-03-25 14:01 IST   |   Update On 2022-03-25 14:01:00 IST
திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் இன்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான காளைகளை கொண்டு வந்தனர். மூஞ்சூர் பட்டை சேர்ந்த அசுரன் என்ற காளையை மாடு விடும் விழாவில் பங்கேற்க செய்ய அழைத்து வந்தனர்.

முன்னதாக காளையை விழா நடைபெறும் தெருவில் சுற்றிக் காண்பித்தனர். அப்போது கட்டுகளிலிருந்து அவிழ்த்து காளை அங்கிருந்து பாய்ந்து ஓடியது.

வேப்பம்பட்டு ரெயில்வே தண்டவாளத்தில் காளை ஓடியது. அப்போது அங்கு சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் காளையின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.

இறந்த காளை அசுரன் பல்வேறு பரிசுகளை வென்று அசத்தியுள்ளது. அது துரதிஷ்டவசமாக ரெயிலில் அடிபட்டு இறந்ததை கண்டு உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

காளையை மீட்டு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Similar News