உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெமிலி:
சென்னை சென்டரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரெயில் நிலையம் வரை உள்ள அனைத்து நிலையங்களிலும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரெயில் பயணிகளுக்கு கிருமி நாசினி, முககவசம் அணிவது, சமுக இடைவெளி பின் பற்றுதல் மற்றும் பயணிகள், மாணவர்கள் ஒடும் ரெயில் ஏறுவதும், இறங்குவதால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகள் பற்றி எடுத்து கூறி ரெயில் பயணிகளிடையே சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டி, துணை சூப்பிரண்டு முத்துகுமார் மற்றும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.